கோயம்புத்தூர்

வாகனச் சோதனையில் ரூ.2.76 லட்சம் பறிமுதல் 

கோவையில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டுச் செல்லப்பட்ட ரூ.2.76 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் ஞாயற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். 

DIN

கோவையில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டுச் செல்லப்பட்ட ரூ.2.76 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் ஞாயற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். 
கோவை ஆர்.எஸ்.புரத்தில் தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும் படை அதிகாரி மல்லிகா தலைமையிலான குழுவினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரூ.2.76 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காரில் வந்த ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த ராம்சிவபிராகாஷிடம் விசாரித்தபோது, அவர் அதே பகுதியில் வீட்டு உள் அலங்காரப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருவது தெரியவந்தது. மேலும், வியாபாரத்தில் கிடைத்தத் தொகையை வீட்டுக்கு எடுத்துச் செல்வதாக அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT