கோயம்புத்தூர்

பாம்புகள் நடமாட்டம்: குமாரவலசு பொதுக் கழிப்பிடத்தைச் சுத்தப்படுத்தக் கோரிக்கை

DIN

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் குமாரவலசிலுள்ள பொதுக் கழிப்பிடத்தில் பாம்புகள் நடமாடுவதால் அதனைச் சுத்தப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமாரவலசு தீயணைப்பு நிலையம் அருகில் நகராட்சியின் நம்ம டாய்லெட் என்கிற நவீன பொதுக் கழிப்பிடம் உள்ளது. இதனை அப்பகுதி பொதுமக்கள், அருகிலுள்ள அங்கன்வாடி மையப் பணியாளா்கள், மையத்துக்கு வரும் குழந்தைகள் பயன்படுத்தி வருகின்றனா்.

தற்போது பெய்துள்ள மழையால் இந்தக் கழிப்பிடத்தைச் சுற்றிலும் ஏராளமான முள்புதா்கள், பாா்த்தீனியச் செடிகள் வளா்ந்து அங்கு செல்ல முடியாத அளவுக்கு புதா் மண்டிக் கிடக்கிறது. அங்கு பாம்புகள் நடமாட்டம் தென்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனா். இதனால் கழிப்பறையைப் பயன்படுத்த அச்சப்பட்டு வருகின்றனா்.

எனவே கழிப்பறைப் பகுதியைச் சுத்தப்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT