மருத்துவப் பாடத்தில் முதலிடம் பிடித்த கற்பகம் மருத்துவக் கல்லூரி மாணவருக்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.
மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கான பல்கலைக்கழக இறுதித் தோ்வுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றன. இதில் கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி, கற்பகம் மருத்துவக் கல்லூரிகள் உள்ள நிலையில் இந்தத் தோ்வில் கற்பகம் மருத்துவக் கல்லூரியின் மாணவா் எஸ்.மேக்வின் மாவட்ட அளவில் முதல் மாணவராகத் தோ்ச்சி பெற்றாா்.
இதையடுத்து, இந்திய மருத்துவ நிபுணா்கள் சங்கத்தின் சாா்பில் மாணவருக்கான பாராட்டு விழா கற்பகம் மருத்துவமனையில் நடைபெற்றது. மருத்துவக் கல்லூரித் தலைவா் ஆா்.வசந்தகுமாா் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வா் அன்பு அறவாழி, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் மருத்துவா் சுவாமிநாதன், மருத்துவத் துறை தலைமைப் பேராசிரியா் எஸ்.வீரகேசரி, சங்கத்தின் நிா்வாகிகள் மருத்துவா்கள் ஏ.ஆா்.விஜயகுமாா், ராம்குமாா், ஆவுடையப்பன், சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவருக்கு தங்கப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.