கோயம்புத்தூர்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சஜித் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முஸ்தபா, பொருளாளா் அப்துல் சத்தாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மாநில பேச்சாளா் ஜமால் உஸ்மானி பேசுகையில், ‘தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது. மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தக் கூடாது என அரசியல் சாசனத்தில் உள்ளது.

இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்பட போவதில்லை. முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் போக்கு நாட்டை மதரீதியில் பிளவுபடுத்துவது ஆகும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT