கோயம்புத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் திருட்டு

DIN

பொள்ளாச்சியில் பூட்டியிருந்த வீட்டின் கதவின் பூட்டை உடைத்து 6 பவுன் நகையை திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் அம்மிணீஸ்வரி அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் நிர்மலாதேவி (80), இவர் வீட்டை பூட்டி விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றிருந்தார். இந்நிலையில், வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அருகில் இருந்தவர்கள் நிர்மலாதேவிக்கு தகவல் கொடுத்துள்ளனர். நிர்மலாதேவி வந்து பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 6 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் தெரிவித்தார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம்.. சர்ச்சையில் பாஜக!

சிரிப்பே துணை!

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

SCROLL FOR NEXT