கோயம்புத்தூர்

சூலூர் அருகே குளத்தில் குதித்து இளைஞர் தற்கொலை

DIN


சூலூர் அருகே பெரிய குளத்தில் குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
சூலூர் பெரிய குளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக சூலூர் காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் சனிக்கிழமை தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்டவர் சூலூர் அருகே மார்கெட் ரோடு பகுதியில் வசிக்கும் செல்வராஜ் மகன் கணேஷ்குமார் (25) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.  இவருக்கு மதுப் பழக்கம் உள்ளது. இந்நிலையில் தனது நண்பர்களுடன் மது அருந்திய கணேஷ்குமார் செல்லிடப்பேசியை வியாழக்கிழமை தவறவிட்டுள்ளார். இதனால் பெற்றோர் திட்டியதால் வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் திரும்பவில்லை. இந்நிலையில், கணேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

SCROLL FOR NEXT