மேட்டுப்பாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதி இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
கோவை மாவட்டம், உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த குமார், இவரது மகன் மனோஜ்குமார் (23). பொறியியல் பட்டதாரியான மனோஜ், சொந்தமாக தொழில் நடத்தி வந்தார்.
இவர் தனது நண்பர்கள் கௌசிகன், பிரதீப், சஞ்ஜய் ஆகியோருடன் கோவையில் இருந்து கல்லாறு நோக்கி சன்க்கிழமை காரில் சென்று கொண்டிருந்தார். காரை மனோஜ் ஓட்டிச் சென்றுள்ளர்.
அப்போது, கரியம்பாளையம்- காரமடை இடையே எம்.ஜி.ஆர். நகர் அருகே கார் சென்று கொண்டிருந்த போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதியுள்ளது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த மனோஜ்குமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காரமடை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.