கோயம்புத்தூர்

தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி

DIN

கோவையில் மாநகராட்சி சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி செவ்வாக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடந்தது. 
கோவை (தெற்கு) சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சி பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில் ரத்தினம் கல்லூரியைச் சேர்ந்த 200 மாணவர்கள் பங்கேற்று 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பதாகைகளை ஏந்திச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செட்டி வீதியில் தொடங்கிய பேரணி பாலாஜி நகர், சாவித்திரி நகர் வழியாக பேரூர் செல்வபுரம் சாலையில் நிறைவடைந்தது. இதில் தெற்கு மண்டல உதவி ஆணையர் டி.ஆர்.ரவி, மண்டல சுகாதார ஆய்வாளர் லோகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT