கோயம்புத்தூர்

பொள்ளாச்சி அருகே ரூ.5.55 லட்சம் பறிமுதல்

DIN


பொள்ளாச்சி வழியாக கணக்கில் வராமல் கொண்டுசெல்லப்பட்ட  ரூ.5 லட்சத்து 55 ஆயிரத்து 300 தொகையே தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.                                     
பொள்ளாச்சியை அடுத்த நல்லூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மகேந்திரா வேனில் வந்த கிருஷ்ணகுமார் (22) என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 
அதேபோல், கேரளத்தில் இருந்து திருச்சிக்குச் சென்ற வேனில் யூசப் (55) என்பவர் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கேரளத்தில் இருந்து கரூருக்குச் சென்ற வேனில் வந்த ராஜசேகர் (36) என்பவரிடம் இருந்த ரூ.2 லட்சத்து 57 ஆயிரத்து 300ஐ பறிமுதல் செய்தனர். 
 மொத்தம் ரூ.5 லட்சத்து 55 ஆயிரத்து 300ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமாரிடம் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT