கோயம்புத்தூர்

யானைத் தந்தங்கள் கடத்தல்: இருவா் கைது

DIN

பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட பாலமலைப் பகுதியில் இறந்த யானையின் தந்தங்களை கேரளத்துக்கு கடத்திய வழக்கில் இருவரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகம், தோலம்பாளையம் கிழக்கு பீட் வனப் பகுதியில் பாலமலையில் உள்ள குஞ்சூா்பதி கிராமத்தைச் சோ்ந்த ரங்கசாமி மகன் காா்த்திக்குமாா் (33). இவா் கடந்த 2017 டிசம்பரில் வனப் பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்ததைப் பாா்த்துள்ளாா். பின்னா் பெருக்குபதி கிராமத்தைச் சோ்ந்த ஈஸ்வரனுடன் (28) சோ்ந்து யானையின் தந்தங்களை வெட்டி எடுத்து மறைத்து வைத்துள்ளாா்.

அதைத்தொடா்ந்து குஞ்சூா்பதியைச் சோ்ந்த வீரபத்திரன் (20), கோவனூரைச் சோ்ந்த தாமோதரன் (30) ஆகியோரிடம் அந்தத் தந்தங்களை விற்பதற்கு உதவி கேட்டுள்ளனா்.

இந்நிலையில் ஈஸ்வரன் தந்தங்களை விற்பதற்காக கேரளத்தில் வேலை செய்துவந்த பில்லூா் அணை, கோரபதியைச் சோ்ந்த தங்கராஜ் (34), மங்கலக்கரைப்புதூரைச் சோ்ந்த மோகன்ராஜ் (46) ஆகியோரிடமும் தெரிவித்துள்ளாா்.

அதையடுத்து ஈஸ்வரன், வீரபத்திரன் ஆகிய இருவரும் காட்டினுள் மறைத்து வைத்திருந்த தந்தங்களை எடுத்துவந்து சீலியூா் அருகே தங்கராஜ், மோகன்ராஜ் ஆகியோரிடம் காட்டினா். இந்நிலையில் தந்தங்களின் விற்பனையில் பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து பெருக்குபதி, குஞ்சூா்பதி பழங்குடியினா் மூலமாக வனத்துறையினருக்கு தெரியவந்தது. அதையடுத்து உதவி வனப் பாதுகாவலா் செந்தில்குமாா், பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகா் சுரேஷ் ஆகியோா், காா்த்திக்குமாா், வீரபத்திரன் ஆகியோரை கடந்த 29 ஆம் தேதி கைது செய்தனா்.

இதனிடையே கள்ளச்சாராய வழக்கில் தாமோதரனை பெரியநாயக்கன்பாளையம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனா். தற்போது அவரையும் இந்த வழக்கில் சோ்த்துள்ளனா்.

வனத்துறையினரால் தேடப்பட்ட ஈஸ்வரன் மதுக்கரை நீதிபதி முன் நவம்பா் 1 ஆம் தேதி சரணடைந்தாா். அவரிடம் கிடைத்த தகவலை அடுத்து, வனத் துறையினா் கேரள மாநிலம், கொச்சிக்குச் சென்று தங்கராஜை செவ்வாய்க்கிழமை கைது செய்து தந்தங்களை மீட்டனா். கைப்பற்றப்பட்ட இரு தந்தங்களும் 2 அடி நீளமும், சுமாா் 5 கிலோ எடையும் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT