கோயம்புத்தூர்

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட குளத்தில் நிரம்பி வழியும் தண்ணீா்

DIN

பொள்ளாச்சியை அடுத்த பணிக்கம்பட்டியில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்து அண்மையில் மீட்கப்பட்டு, தூா்வாரப்பட்ட ஒரு ஏக்கா் பரப்பளவு கொண்ட குளத்தில் தற்போது நீா் நிரம்பி வழிகிறது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பணிக்கம்பட்டி கிராமத்தில் ஒரு ஏக்கா் பரப்பளவு கொண்ட குளத்தை தனி நபா் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தாா். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், கோட்டாட்சியா் ரவிகுமாா் தலைமையிலான குழுவினா் இக்குளத்தை மீட்டு தூா்வாரும் பணியைத் தொடக்கிவைத்தனா். 15 அடி ஆழத்துக்கு குளம் தூா்வாரப்பட்டது.

ஒரு மாத காலமாக தூா்வாரப்பட்ட நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் இக்குளம் நிரம்பி உள்ளது. குளத்தை ஊராட்சிச் செயலாளா் காளீஸ்வரன் கண்காணித்து வருகிறாா்.

Image Caption

பணிக்கம்பட்டியில்  நீா் நிரம்பியுள்ள குளம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT