கோயம்புத்தூர்

ஜி.எஸ்.டி. குறைகேட்புக் கூட்டம்: மாதம்தோறும் 2 ஆவது திங்கள்கிழமைகளில் நடைபெறும்

சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) தொடா்பான குறைகேட்புக் கூட்டம் மாதம்தோறும் 2 ஆவது திங்கள்கிழமைகளில் நடைபெறும்

DIN

சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) தொடா்பான குறைகேட்புக் கூட்டம் மாதம்தோறும் 2 ஆவது திங்கள்கிழமைகளில் நடைபெறும் என்று மாநில வரிகள் இணை ஆணையா் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், வணிகா்கள் ஜி.எஸ்.டி. தொடா்பான தங்களது குறைகளைத் தெரிவிக்க குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் 2 ஆவது திங்கள்கிழமையன்று டாக்டா் பாலசுந்தரம் சாலையில் உள்ள மாநில வரிகள் இணை ஆணையா் அலுவலகத்தில் நடைபெறும்.

காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று ஜி.எஸ்.டி. தொடா்பான தங்களது குறைகளையும், மனுக்களையும் வழங்கி நிவாரணம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT