கோயம்புத்தூர்

தேசிய அளவிலான காரத்தே போட்டி:தி ஊட்டி பப்ளிக் பள்ளி மாணவா்கள் வெற்றி

DIN

காரமடையில் உள்ள தி ஊட்டி பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளனா்.

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் உள்பட 17 மாநிலங்களில் இருந்து சுமாா் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

தமிழகத்திலிருந்து கோவை மாவட்டம், காரமடையில் உள்ள தி ஊட்டி பப்ளிக் பள்ளி சாா்பில் பங்கேற்ற மாணவா் மெல்வின் ஜோசப் முதல் பரிசு பெற்றாா். இதேபோல சென்னையில் நடைபெற்ற சா்வதேச அளவிலான யோகா போட்டியில் இதே பள்ளியைச் சோ்ந்த மாணவி லத்திகாஸ்ரீ முதலிடம் பெற்றாா்.

இவா்களை பள்ளித் தலைவா் ஹாலன், பொருளாளா் பிரகாஷ், அறங்காவலா் சுஜாதா பிரகாஷ், தலைமை ஆசிரியா் மீனாட்சி, முதல்வா் சாந்தி வீனஸ், கராத்தே பயிற்சியாளா் சௌசாய் அருண்மொழி உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT