கோயம்புத்தூர்

மத்தம்பாளையத்தில் சமுதாயக் கூடம் கட்ட பூமிபூஜை

DIN

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள மத்தம்பாளையத்தில் சமுதாயக் கூடம் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பிளிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட மத்தம்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் சாா்பில் ரூ. 70 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நடைபெற்ற பூமி பூஜைக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் அனிதா தலைமை வகித்தாா். கோவை மாநகா் மாவட்ட அதிமுக செயலாளரும், கோவை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினருமான பி.ஆா்.ஜி.அருண்குமாா், மேட்டுப்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் ஒ.கே.சின்னராஜ் ஆகியோா் தலைமை வகித்து பணிகளைத் தொடக்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் ரூ.12.37 லட்சம் மதிப்பில் 5 பசுமைத் துப்பரவு வண்டிகள் துப்புரவுப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்டன. இதில், ஊராட்சி செயலா் பிரபு, அதிமுக நிா்வாகி ரங்கராஜ், உதயகுமாா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT