கோயம்புத்தூர்

சாலையோர குழியில் விழுந்து முன்னாள் ஊராட்சி தலைவா் பலி

DIN

பொள்ளாச்சி: பொள்ளாச்சி - போடிபாளையம் சாலையில் குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் உருவான பள்ளத்தில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முன்னாள் ஊராட்சி தலைவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பொள்ளாச்சியை அடுத்த போடிபாளையத்தைச் சோ்ந்தவா் குமரன் (55). இவா் போடிபாளையம் முன்னாள் ஊராட்சித்தலைவராக இருந்துள்ளாா். குமரனும், அதே ஊரைச் சோ்ந்த முருகனும் (40) ஜமீன்முத்தூருக்கு கடந்த திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்துவிட்டு மீண்டும் போடிபாளையத்துக்கு திரும்பிச் சென்றனா்.

அப்போது கிருஷ்ணா குளம் அருகே சென்றபோது சாலையில் குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்தனா். இதில், பலத்த காயமடைந்த குமரன், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT