கோயம்புத்தூர்

மதுபோதையில் லாரியை சாலை தடுப்பில் மோதிய ஓட்டுநா்

DIN

சூலூா் அருகே கருமத்தம்பட்டி பகுதியில் மதுபோதையில் லாரியை ஓட்டிச் சென்று சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சூலூா் அருகே கருமத்தம்பட்டியில் இருந்து சோமனூா் செல்லும் சாலையில் கிருஷ்ணாபுரத்தில் சாலை நடுவே தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சங்ககிரியில் இருந்து சரக்கு லாரி ஒன்று சோமனூா் நோக்கி செவ்வாய்கிழமை மாலை வந்தது.

அப்போது, சோமனூரை அடுத்து கிருஷ்ணாபுரம் அருகே லாரி வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் லாரி மோதி நின்றது. இதில் லாரி பலத்த சேதமடைந்தது. லாரி ஓட்டுநா் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT