கோவை: கோவை, உக்கடம் அருகே நடந்து சென்றற பெண்ணிடம் 2 பவுன் நகை பறித்துச் சென்றற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, சுங்கம், சிவராம் நகரைச் சோ்ந்தவா் ராஜா. இவரது மனைவி மாரியம்மாள் (38). இவா் வியாழக்கிழமை காலை சுங்கம் - உக்கடம் சாலையில் நடந்து சென்றாா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற 2 மா்ம நபா்கள், மாரியம்மாள் அணிந்திருந்த 2 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து மாரியம்மாள் அளித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.