கோயம்புத்தூர்

ஆசிரியையிடம்  5 பவுன் நகைப் பறிப்பு

DIN

பெரியநாயக்கன்பாளையத்தில் சாலையில் நடந்து சென்ற அரசுப் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
வீரபாண்டி பிரிவில் உள்ள சக்தி நகரைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி கீதாலட்சுமி (52). திருமலைநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில், வீரபாண்டி பிரிவில் இருந்து அவரது வீட்டுக்கு வெள்ளிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கீதாலட்சுமியிடம் அருந்து 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

பவானி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

மாநகராட்சியில் 50 இடங்களில் 50 நீா்மோா் பந்தல்: ஆணையா் தொடங்கிவைத்தாா்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி

SCROLL FOR NEXT