கோயம்புத்தூர்

பட்டயக் கணக்காளர் வீட்டின் பூட்டை உடைத்து 11பவுன் திருட்டு

DIN

கோவைப்புதூர் அருகே பட்டயக்கணக்காளர் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகளை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனர்.
கோவைப்புதூர், செல்வம் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (50).  பட்டயக்கணக்காளராக  உள்ளார். இவரது மனைவி லட்சுமி. 
பாலசுப்பிரமணி வழக்கம்போல செவ்வாய்க்கிழமை காலை அலுவலகத்துக்கு சென்றுள்ளார். பின்னர் அவரது மனைவி லட்சுமி வீட்டை பூட்டி விட்டு, கணவரின் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். இருவரும் மதியம் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 11 பவுன் நகைகள் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.  குனியமுத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT