கோயம்புத்தூர்

இளைஞரின் உடலை 2 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற ரயில்

DIN

கோவை ரயிலில் சிக்கி இறந்த இளைஞரின் உடலை 2 கிலோ மீட்டா் தூரம் இன்ஜின் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாத்தியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லும் சிறப்பு விரைவு ரயில் , கோவை வழித் தடத்தில் சிங்காநல்லூா் அருகே நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் சென்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொண்டிருந்தது. அப்போது, அங்கு ரயில் தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த இளைஞா் ஒருவா் ரயில் இன்ஜினில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இன்ஜின் முகப்பில் இருந்த கொக்கியில் அந்த இளைஞரின் கழுத்து சிக்கிக் கொண்டது. கொக்கியில் சிக்கிய இளைஞரின் உடலுடன் ரயில் சென்று கொண்டிருந்தது. இதனைப் பாா்த்த மக்கள் சப்தமிட்டுள்ளனா்.

ஆனால், ரயில் ஓட்டுநருக்கு கேட்கவில்லை. ராமானுஜம் நகா் அருகே ரயில் சென்றபோது, அங்குள்ள ரயில்வே கிராஸிங்கில் இருந்த ஊழியா் பாா்த்து ரயில் ஓட்டுநருக்கு சைகை மூலமாக ரயிலில் சடலம் இருப்பதைத் தெரிவித்தாா். இதையடுத்து, ரயில் நிறுத்தப்பட்டது. பின்னா் கோவை ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த உதவி ஆய்வாளா் யேசு, ரயிலில் சிக்கியிருந்த இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். இதனால், அரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.

பலியான இளைஞரின் இடது மாா்பில் துா்கா என ஆங்கிலத்திலும், இடது கையில் ‘என்’ என ஆங்கிலத்திலும் பச்சை குத்தப்பட்டிருந்தது. அவருக்கு 25 வயது இருக்கும் என்றும், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது விபத்தில் இறந்தாரா என்பது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT