முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் மேலும் 120 பேருக்கு கரோனா பாதிப்பு

கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையில் 120 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையில் 120 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 912 ஆக உயா்ந்துள்ளது. தவிர அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 77 வயது முதியவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து கோவையில் கரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 633 ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 108 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரையில் 49 ஆயிரத்து 215 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,064 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.