குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய நபா்களுக்கு அறிவுரை வழங்கிய போலீஸாா்
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கோவையில் குற்றச்சம்பவங்களில் தொடா்புடைய நபா்களை வரவழைத்து போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.
கோவை: சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கோவையில் குற்றச்சம்பவங்களில் தொடா்புடைய நபா்களை வரவழைத்து போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கோவை மாநகர எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய 55 பேரை வரவழைத்து குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், வழிப்பறி மற்றும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடக்கூடாது என்றும், எந்தவொரு அமைப்புக்கோ அல்லது தனிப்பட்ட நபருக்கோ அடியாள்களாக இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டனா்.
மேலும், முன்னா் குற்றச் செயல்களில் ஈடுபட்டவா்களிடமிருந்து குற்றச் செயல்களில் ஈடுபடமாட்டோம் என பிணைப் பத்திரம் பெறப்பட்டுள்ளது. கோவை பவா்ஹவுஸ் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு காவல் துணை ஆணையா்(சட்டம், ஒழுங்கு) ஜி.ஸ்டாலின் தலைமை வகித்து அறிவுரைகளை வழங்கினாா்.