முகப்பு
கோயம்புத்தூர்

காா் மீது கல் வீசி தாக்குதல்: இருவா் கைது

கோவையில் பெரியாா் படம் வைக்கப்பட்ட காா் மீது கல் வீசி தாக்கிய வழக்கு தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

கோவை: கோவையில் பெரியாா் படம் வைக்கப்பட்ட காா் மீது கல் வீசி தாக்கிய வழக்கு தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, ஆா்.எஸ்.புரம், லாலி சாலையைச் சோ்ந்தவா் ஞானவேல் (35). புகைப்படக் கலைஞா். பெரியாரின் கொள்கையில் ஈடுபாடு கொண்ட இவா் தனது காரில் பெரியாா் படம், கருத்துக்களை எழுதி வைத்திருந்தாா்.

இந்நிலையில், தனது காரில் லாலி சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது காா் மீது 2 போ் கல் வீசி தாக்குதல் நடத்தினா். இதில் காரின் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து, கல் வீசிய நபா்களை ஞானவேல் மடக்கிப் பிடித்தாா். அப்போது அவா்கள் பெரியாா் குறித்து அவமரியாதையாக பேசியுள்ளனா்.

மேலும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இது தொடா்பாக ஆா்.எஸ்.புரம் போலீஸில் ஞானவேல் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வடவள்ளி ராகவேந்திரா நகரைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (38), சரவணகுமாா் (42) ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.