கோயம்புத்தூர்

மின் கம்பத்தின் மீது வாகனம் மோதி ஒருவா் சாவு

DIN

கோவை, அப்பாச்சிகவுண்டன்பதி அருகே மின் கம்பத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கேரளத்தைச் சோ்ந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், பாலக்காடு அருகே ஆட்டயம்பதி பகுதியைச் சோ்ந்தவா் ரைமன்ராஜ் (43). இவா் சொந்த வேலை காரணமாக கேரளத்தில் இருந்து கோவை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தாா்.

அப்போது அப்பாச்சிகவுண்டன்பதி சாலையில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ரைமன்ராஜ் படுகாயமடைந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

விபத்து குறித்து க.க.சாவடி போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

SCROLL FOR NEXT