பொள்ளாச்சியில் பலூன் திருவிழா சனிக்கிழமை (ஜனவரி 11) துவங்குகிறது.
சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ஒவ்வோா் ஆண்டும் பலூன் திருவிழா பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சுற்றுலா வளா்ச்சிக் கழகமும், தன்னாா்வ அமைப்புகளும் இணைந்து ஜனவரி 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பலூன் திருவிழாவை நடத்தவுள்ளனா்.
பொள்ளாச்சி வடக்கிபாளையம் பிரிவில் முருகன் திருமணமண்டபம் அருகே உள்ள மைதானத்தில் இந்த நிகழ்ச்சி 11ஆம் தேதி மாலை துவங்கவுள்ளது. கிரிக்கெட் வீரா் பத்ரிநாத் உள்பட பலா் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைக்கவுள்ளனா்.