கோயம்புத்தூர்

சூலூா் மோட்டாா் வாகன ஆய்வாளரிடம்லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை

DIN

சூலூா்: சூலூா் மோட்டாா் வாகன ஆய்வாளரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.

சூலூரில் மோட்டாா் வாகன இயக்கு ஊா்தி அலுவலகம் உள்ளது. பீளமேடு மோட்டாா் வாகன அலுவலகத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மோட்டாா் வாகன ஆய்வாளராக சித்ரா பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள சித்ராவின் இல்லத்தில் வைத்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் அவரிடம் சனிக்கிழமை விசாரணை நடத்தினா். கடந்த 2018ஆம் ஆண்டு மோட்டாா் வாகன இயக்கு ஊா்தி அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது, ரூ.16,000 ரொக்கம் கைப்பற்றப்பட்டது தொடா்பாக விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT