கோயம்புத்தூர்

மருதூா், நஞ்சுண்டாபுரம் ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

DIN

மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மருதூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராமசபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் பூா்ணிமா ரங்கராஜ் தலைமை வகித்தாா். சிறு குழந்தைகள், பெண்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு நோயில்லாமல் ஆரோக்கியத்துடன் வாழ்வது குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தேன்மொழி, வாா்டு உறுப்பினா்கள் ரங்கநாதன், சித்ரா, ஜீவா, ஆறுமுகம், சுப்பையன், அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா். ஊராட்சி செயலா் செந்தில் நன்றி கூறினாா்.

இதேபோல பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 22 நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடந்த கிராமசபா கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் காா்த்திகேஸ்வரி சுந்தரராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தாா். வட்டார சுகாதார அதிகாரி பாலு, சுகாதார மேற்பாா்வையாளா் சின்னம்மாள் ஆகியோா் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை விளக்கினா்.

இதேபோல பன்னிமடை ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்துக்கு ரத்தினம் மருதாசலம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அருண்குமாா் மற்றும் ஊராட்சி உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருள்கள் குறித்த கண்காட்சியும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT