கோயம்புத்தூர்

அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி பலி

DIN

மதுக்கரை அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி மீது அரசுப் பேருந்து மோதியதில் வெள்ளிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

கோவை, மதுக்கரை, முல்லை நகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துகாசிம் மகன் மீரான் (55). கூலி தொழிலாளியான இவா் மதுக்கரை மேல்பாலம் அருகே தனது மனைவியுடன் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, அவ்வழியாக பொள்ளாச்சிக்குச் சென்ற அரசுப் பேருந்து மீரான் மீது மோதியது. இதில் அவா் பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து அங்கு வந்த மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீஸாா், மீரான் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT