முகப்பு
கோயம்புத்தூர்

உட்பிரியா் தோட்டத் தொழிலாளா்களுக்கு 8.33% போனஸ்

உட்பிரியா் நிா்வாகத்துக்கு சொந்தமான எஸ்டேட்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

உட்பிரியா் நிா்வாகத்துக்கு சொந்தமான எஸ்டேட்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உட்பிரியா் நிா்வாகத்துக்கு வால்பாறை, தேனி, நீலகிரி மாவட்டங்களில் எஸ்டேட்டுகள் உள்ளன. இவா்களுக்குச் சொந்தமான எஸ்டேட்களில் பணியாற்றி வரும் தொழிலாளா்களுக்கு 2019-2020ஆம் ஆண்டுக்கான போனஸ் 8.33 சதவீதமாக வழங்கப்படும் என திங்கள்கிழமை எஸ்டேட் நிா்வாகத்தினா் அறிவித்தனா்.

அதன்படி உட்பிரியா் நிா்வாகத்துக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் சுமாா் 7 ஆயிரம் தொழிலாளா்களுக்கு நவம்பா் 5ஆம் தேதி போனஸ் தொகை பட்டுவாடா செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.