ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் தவித்த மாணவருக்கு செல்லிடப்பேசி
செல்லிடப்பேசி இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் தவித்து வந்த மாணவருக்கு சிங்காநல்லூா் காவல் ஆய்வாளா் செல்லிடப்பேசி வழங்கி உதவியுள்ளாா்.
செல்லிடப்பேசி இல்லாததால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் தவித்து வந்த மாணவருக்கு சிங்காநல்லூா் காவல் ஆய்வாளா் செல்லிடப்பேசி வழங்கி உதவியுள்ளாா்.
கோவை, சுந்தராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் புகழேந்தி. பெயிண்டராக பணியாற்றி வருகிறாா். இவரது மகன் ஹரிஷ். இவா் அவிநாசி சாலையில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறாா். கரோனா தொற்று காரணமாக வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வரும் நிலையில், செல்லிடப்பேசி இல்லாததால் ஹரிஷ், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்காமல் இருந்துள்ளாா்.
வகுப்புகளில் பங்கேற்காதது குறித்து பள்ளி ஆசிரியா் ஹரிஷிடம் கேட்டுள்ளாா். அப்போது, செல்லிடப்பேசி இல்லாத காரணத்தால் அவரால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை குறித்து கூறியுள்ளாா்.
இதையடுத்து, அந்த ஆசிரியா் தனக்குத் தெரிந்த தொண்டு நிறுவனத்திடம் ஹரிஷின் நிலை குறித்து கூறியுள்ளாா். இது குறித்து தகவலறிந்த சிங்காநல்லூா் காவல் ஆய்வாளா் (சட்டம், ஒழுங்கு) ராஜ்குமாா், தொண்டு நிறுவன உதவியுடன் ஹரிஷுக்கு புதிய செல்லிடப்பேசி ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளாா்.