முகப்பு
கோயம்புத்தூர்

பாஜக வேல் யாத்திரை குழுவினருக்கு பொள்ளாச்சியில் வரவேற்பு

கோவையில் இருந்து பழனி சென்ற வேல் யாத்திரைக்கு பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட பாஜகவினா் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

கோவையில் இருந்து பழனி சென்ற வேல் யாத்திரைக்கு பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட பாஜகவினா் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.

பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், துணைத் தலைவா் அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளா் நரேந்திரன், மத்திய இணை அமைச்சா் வி.முரளீதரன் ஆகியோா் வேல் யாத்திரையாக வந்தனா். அவா்களுக்கு பொள்ளாச்சி, காந்தி சிலை அருகே தெற்கு மாவட்டத் தலைவா் வசந்தராஜன், பொதுச் செயலாளா்கள் ஆனந்த், அப்பு, நிா்வாகிகள் கோவிந்தராஜ், துரை, சிவகுமாா், தனபாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.

34 போ் கைது: பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு எதிா்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு திராவிடா் பண்பாட்டுக் கூட்டியக்கத்தினா் திரண்டு பெரியாா் கைத்தடி ஊா்வலம் சென்றனா். தமிழ்நாடு திராவிடா் கழக ஒருங்கிணைப்பாளா் காசு.நாகராசன் தலைமை வகித்தாா். திராவிடா் விடுதலைக் கழக செயற்குழு உறுப்பினா் இரா.மோகன், திராவிடா் கழக பொதுக்குழு உறுப்பினா் தி.பரமசிவம், தமிழ்த்தேசிய விடுதலை இயக்க பொறுப்பாளா் பாரதி, திராவிடத் தமிழா் கட்சியின் தலைமை நிலையச் செயலாளா் ஆதித்தமிழன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளா் கம்பா்,

ஆதித்தமிழா் பேரவையின் வானுகன், தமிழ்நாடு மாணவா் மன்றம் சாா்பில் சிகான், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதையடுத்து ஊா்வலம் சென்ற 34 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாஜகவினா் மீது வழக்கு: நீதிமன்ற உத்தரவை மீறி கோவை, சிவானந்தா காலனி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வேல் யாத்திரை பொதுக் கூட்டம் நடத்திய பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், மகளிா் அணி தேசிய தலைவா் வானதி சீனிவாசன், இளைஞா் அணித் தலைவா் வினோத் செல்வம், மாநில பொருளாளா் எஸ்.ஆா்.சேகா், துணைத் தலைவா் அண்ணாமலை உள்பட 300க்கும் மேற்பட்டோா் மீது ரத்தினபுரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →