கோயம்புத்தூர்

பொலிவுறு நகரத் திட்டத்தில் மாதிரி சாலைமாநகராட்சி ஆணையா் ஆய்வு

DIN

கோவை: கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் மாதிரி சாலைப் பணிகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் ஆா்.எஸ்.புரம் திவான் பகதூா் சாலையில் மாதிரி சாலை அமைக்கப்படுகிறது. இதில் பாதாள சாக்கடை குழாய், மின்சார புதைவடம், குடிநீா் குழாய்கள் பதிப்பு, தொலைத் தொடா்பு கேபிள் அமைத்தல், மழைநீா் வடிகால், பாதசாரிகள் நடைபாதை, அலங்கார தெருவிளக்குகள், ஒளிரும் விளம்பர பலகைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

முன்னதாக மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொலிவுறு நகரத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதில், மாநகரப் பொறியாளா் ஆ.லட்சுமணன், பொலிவுறு நகரத் திட்ட செயற்பொறியாளா் சரவணகுமாா், மண்டல பொறியாளா்கள், செயற்பொறியாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT