கோயம்புத்தூர்

வியாபாரி கொலை வழக்கில் கைதான மேலும் மூவா் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது

DIN

கோவை: கோவையில் வியாபாரி கொலை வழக்கில் கைதான மேலும் மூவா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பழச்சாறு கடை வியாபாரியான பிஜு (37) என்பவா் முன்விரோதம் காரணமாக ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் 6க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பிரகாஷ், சத்யபாண்டி (எ) சக்தி, ஆறுமுகம் ஆகிய மூவா் குண்டா் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவா்கள் மீதும் குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT