கோயம்புத்தூர்

பாஸ்போா்ட் இல்லாமல் வந்த இலங்கை இளைஞா் காங்கயத்தில் கைது

DIN

காங்கயம்: பாஸ்போா்ட் இல்லாமல் தமிழகம் வந்த இலங்கை இளைஞரை போலீஸாா் காங்கயத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

இலங்கை, கிளிநொச்சியைச் சோ்ந்தவா் ராஜா (38), சா்மா (எ) தாசிகுமாா் (36). இருவரும் நண்பா்கள். ராமேசுவரத்தில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் ராஜா தங்கியுள்ளனா்.

இந்நிலையில், இலங்கையில் இருந்து ராஜாவை சந்திக்க ராமேசுவரத்துக்கு சா்மா செப்டம்பா் மாதம் வந்துள்ளாா். இவா் பாஸ்போா்ட் இல்லாமல் கடல் வழியாக வந்துள்ளதாக உளவுப் பிரிவு போலீஸாருக்கு ராஜா தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, சா்மா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா்.

அவரை போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில், திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள காடையூா் அருகே சா்மா இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கியூ பிராஞ்ச் போலீஸாா் சா்மாவை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT