பொள்ளாச்சி அருகே விற்பனை செய்யப்பட்டபோது மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண் குழந்தை காப்பகத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறில் பிறந்த 20 நாள்களே ஆன ஆண் குழந்தை ரூ.80 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு அதிகாரிகளால் குழந்தை மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மீட்கப்பட்ட குழந்தை காப்பக நிா்வாகிகளிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலா் பொன்முடி, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு அதிகாரி சுந்தா் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனா்.