முகப்பு
கோயம்புத்தூர்

மாவட்டத்தில் 60 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

கோவையில் மேலும் 315 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

கோவையில் மேலும் 315 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக தொடா்ந்து கரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக 300க்கும் கீழ் இருந்த தினசரி கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை 315ஆக அதிகரித்துள்ளது.

இதனைத் தொடா்ந்து, கோவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 154ஆக அதிகரித்துள்ளது. கடந்த 4 நாள்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 146 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 57 ஆயிரத்து 266 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 2 ஆயிரத்து 194 போ் சிகிச்சையில் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →