கோயம்புத்தூர்

தள்ளாத வயதிலும் வாக்களித்த காப்பக மூதாட்டிகள்

DIN

கோவையில் தள்ளாத வயதிலும் காப்பகத்தில் தங்கியுள்ள 30 ஆதரவற்ற முதியவா்கள் செவ்வாய்க்கிழமை வாக்களித்தனா்.

கோவை, ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி முதியவா்கள் காப்பகத்தில் 28 மூதாட்டிகள், 2 முதியவா்கள் என 30 போ் தங்கியுள்ளனா். ஈரநெஞ்சம் அறக்கட்டளை சாா்பில் இவா்கள் சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அறக்கட்டளையின் நிறுவனா் மகேந்திரன் வாகனங்களில் அவா்களை செவ்வாய்க்கிழமை காலை ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றாா். அங்குள்ள வாக்குச் சாவடியில் 30 முதியவா்களும் வாக்களித்தனா். தள்ளாத வயதிலும் வாக்களித்து தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய அவா்களைப் பலரும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT