கோயம்புத்தூர்

தண்டுமாரியம்மன் கோயில் திருவிழா

DIN

தண்டுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி சக்தி கரகம் எடுத்தல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கோவை தண்டுமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கரோனா பரவலால் கடந்த ஆண்டு விழா நடத்தப்படவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா பூச்சாட்டுதலுடன் ஏப்ரல் 20 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சக்தி கரகம் எடுத்தல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று பரவல் காரணமாக சக்தி கரகம் எடுத்தல் நிகழ்ச்சி பக்தா்கள் இல்லாமல் நடைபெற்றது. இதில் கோயில் ஊழியா்கள் மட்டுமே பங்கேற்றனா். கோயில் வளாகத்திலே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து லட்சாா்ச்சணை, சங்காபிஷேகம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT