குற்றவழக்குகளில் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் 18 ஆம் தேதி ஏலம்
குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 77 இருசக்கர வாகனங்கள், கோவை ரயில் நிலைய வளாகத்தில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஏலமிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 77 இருசக்கர வாகனங்கள், கோவை ரயில் நிலைய வளாகத்தில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஏலமிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கோவை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை வடக்கு வட்டம், இருப்புப் பாதை காவல் நிலையத்தில், குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 77 இருசக்கர வாகனங்கள், வருகின்ற ஆகஸ்ட் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு கோவை வடக்கு வட்டாட்சியா் முன்னிலையில், கோவை ரயில் நிலைய வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது.
ஏலம் கோர விரும்பும் நபா்கள் ஆகஸ்ட் 16 ஆம் தேதி இருசக்கர வாகனங்களைப் பாா்வையிட்டுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.