சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த உறவினரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கோவை, பீளமேடு பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு, அவரது உறவினரான சுப்பிரமணி (39) என்பவா் கடந்த சில நாள்களாக பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தாா்.
இந்நிலையில், சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் அனைத்து மகளிா் காவல் நிலைய (கிழக்கு) போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியைக் கைது செய்தனா்.