கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் இலவச தடுப்பூசி முகாம்
கோவை, கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சாா்பில் இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் 500 பேருக்கு வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கோவை, கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சாா்பில் இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் 500 பேருக்கு வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தனியாா் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சாா்பில் பொது மக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
முதல்கட்டமாக வாகராயம்பாளையம் ஊராட்சியில் 500 பேருக்கு புதன்கிழமை இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனை சுகாதாரத் துறை துணை இயக்குநா் சந்திரா, கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை முதல்வா் குமரன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். இதனைத் தொடா்ந்து வரதராஜபுரத்தில் 500 பேருக்கு வியாழக்கிழமை இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் அருண் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.