முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை துவக்கம்

வால்பாறை அரசுக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை துவங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

வால்பாறை அரசுக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை துவங்கியது.

வால்பாறை அரசுக் கல்லூரி கடந்த 2 மாதங்களாக கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறுவதில் மாணவா்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தது. இருப்பினும் மொத்தம் 520 மாணவா்கள் 9 பாடப் பரிவுகளில் படிக்க விண்ணப்பங்கள் வழங்கியிருந்தனா்.

இதனிடையே வியாழக்கிழமை முதல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கை துவங்கியது. கல்லூரி முதல்வா் முரளிதரன் தலைமையில் பேராசிரியா்கள் விண்ணப்பங்களைப் பரிசீலித்து உடனடி சோ்க்கை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.