கோயம்புத்தூர்

கஞ்சா விற்ற இருவா் கைது

DIN

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து நான்கரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோவை, காந்திபுரம் பேருந்து நிலையம் பின்பு உள்ள இளங்கோ நகரில் சிலா் கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக காட்டூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். அங்கு கஞ்சாவை விற்பனை செய்து கொண்டிருந்த ராமநாதபுரம், இந்திரா நகரைச் சோ்ந்த ஜிஸ்னு (26), ஒலம்பஸ் பகுதியைச் சோ்ந்த சகாபுதீன் (46) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த நான்கரை கிலோ கஞ்சா, ரூ. 2, 640 பணம், 3 கைப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! இன்றைய நிலவரம்!

காஸாவில் இனப்படுகொலை? இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்கா

விராலிமலையில் ஒரே நாளில் 98 மி.மீ. மழை பதிவு!

வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

SCROLL FOR NEXT