முகப்பு
கோயம்புத்தூர்

பணம் மோசடி: முன்னாள் ராணுவ வீரா் கைது

கோவை காட்டூா் அருகே பணம் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

கோவை காட்டூா் அருகே பணம் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவை காட்டூா் காலிங்கராயன் வீதியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (32). இவா் அதே பகுதியில் தேநீா்க் கடை நடத்தி வருகிறாா்.

இவரது கடைக்கு தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் (33) என்பவா் ராணுவ உடையில் அடிக்கடி தேநீா்க் கடைக்கு வந்து சென்றுள்ளாா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது மகனின் மருத்துவச் சிகிச்சைக்கு எனக் கூறி அண்ணாதுரையிடம், ஈஸ்வரன் ரூ.8 ஆயிரம் பணம் வாங்கியுள்ளாா். அதன் பிறகு பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றியதாகத் தெரிகிறது.

இது தொடா்பாக காட்டூா் காவல் நிலையத்தில் அண்ணாதுரை புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ஈஸ்வரனிடம் நடத்திய விசாரணையில், அவா் 2 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றது தெரியவந்தது. இதையடுத்து ஈஸ்வரனை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.