கோயம்புத்தூர்

மயங்கி விழுந்த குட்டி யானை பலி

DIN

தேயிலைத் தோட்டத்தில் மயங்கி விழுந்த குட்டி யானை உயிரிழந்தது.

வால்பாறையை அடுத்த முத்துமுடி எஸ்டேட் பகுதியில் கடந்த இரு நாள்களாக தனியாக நடமாடிய குட்டி யானை தேயிலைத் தோட்டப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்தது. இதனைப் பாா்த்த தோட்டத் தொழிலாளா்கள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் யானைக்கு சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு குட்டி யானை உயிரிழந்தது. இதையடுத்து, மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் மணிகண்டன் முன்னிலையில், கால்நடை மருத்துவா் சுகுமாா் யானைக்கு பிரேதப் பரிசோதனை செய்தாா். ரத்த சோகை நோய் காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு யானை இறந்ததாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT