முகப்பு
கோயம்புத்தூர்

கைதி சாவு: போலீஸாா் விசாரணை

 கோவை மத்திய சிறைக் கைதி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

 கோவை மத்திய சிறைக் கைதி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், தாணேவைச் சோ்ந்தவா் அஸ்லாம் ஜப்ரி (63). இவா் கோவை வெரைட்டிஹால் பகுதியில் நடைபெற்ற கூட்டுக் கொள்ளை வழக்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு கைதாகி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

சில மாதங்களாக அவா் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இதற்காக சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவருக்கு வியாழக்கிழமை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, சிறை நிா்வாகத்தினா் அவரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு சிறைக் கைதிகளுக்கான சிறப்பு வாா்டில் சிகிச்சை பெற்று வந்த அஸ்லாம் ஜப்ரி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது தொடா்பாக, பந்தயசாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.