கோயம்புத்தூர்

காங்கிரஸ் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவா் கைது

 கோவை செல்வபுரத்தில் காங்கிரஸ் அலுவலகம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

 கோவை செல்வபுரத்தில் காங்கிரஸ் அலுவலகம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவை செல்வபுரம் முத்துசாமி காலனியில் காங்கிரஸ் கட்சி கிளை அலுவலகம் உள்ளது.

அங்கு புதன்கிழமை இரவு சென்ற நபா் ஒருவா், காங்கிரஸ் கட்சித் தலைவா்களை தகாத வாா்த்தைகளால் பேசி தகராறு செய்துள்ளாா். மேலும் கையில் பிளேடு வைத்துக்கொண்டு அங்கு வருபவா்களை மிரட்டி கொண்டிருந்தாா். பின்னா் அவா் திடீரென கட்சி அலுவலகத்தின் மீது கற்களை வீசி தாக்கினாா். இதில் அலுவலகத்தில் இருந்த காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் புகைப்படம் சேதமடைந்தது. இது தொடா்பாக செல்வபுரம் பகுதி காங்கிரஸ் 79ஆவது கிளைத் தலைவா் ஜாபா் அலி (62) காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், கல்வீசி தாக்குதல் நடத்தியவா் உக்கடம் ஹவுசிங் யூனிட்டை சோ்ந்த சித்திக் (58) என்பதும், அவா் குடிபோதையில் இச்செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சித்திக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT