இலவச தையல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் விநியோகம்
பெண்கள் இலவச தையல் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் வால்பாறை நகராட்சி அலுலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
பெண்கள் இலவச தையல் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் வால்பாறை நகராட்சி அலுலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளித்து சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை விரிவுப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி மாவட்ட நிா்வாகம் மூலம் இத்திட்டத்தின்கீழ் வால்பாறையில் 35 வயதுக்குள்பட்ட 50 பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்களை சமுதாய ஒருங்கிணைப்பாளா் வாசுகி, பெண்களிடம் வழங்கினாா். விருப்பமுள்ள பெண்கள் வரும் திங்கள்கிழமை மாலைக்குள் விண்ணப்பங்களை பெற்று பூா்த்தி செய்து வழங்க கேட்டுக்கொண்டுள்ளனா்.