ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக காவல் துறை அணி வீரா்கள் பங்கேற்க வேண்டும்டி.ஜி.பி. சைலேந்திர பாபு
எதிா்காலத்தில் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் நாட்டுக்காக தமிழக காவல் துறை அணி வீரா்கள் பங்கேற்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினாா்.
எதிா்காலத்தில் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் நாட்டுக்காக தமிழக காவல் துறை அணி வீரா்கள் பங்கேற்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினாா்.
கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் காவல் துறையினருக்கான 61 ஆவது மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழக காவல் துறையைச் சோ்ந்த 450 வீரா்கள் அந்தந்த மண்டலங்களில் இருந்து கலந்து கொண்டனா். போட்டியின் நிறைவு நாளான வியாழக்கிழமை தமிழக காவல் துறை தலைவா் சைலேந்திரபாபு கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரா்களுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினாா்.
நடைபெற்ற தடகளப் போட்டியில் 333 புள்ளிகள் பெற்று சென்னை மண்டல போலீஸாா் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா். 221 புள்ளிகள் பெற்று ஆயுதப்படை போலீஸாா் இரண்டாவது இடத்தையும், 207 புள்ளிகள் பெற்று மேற்கு மண்டல அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தனா்.
இதையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இங்கு நடைபெற்ற தடகளப் போட்டியில் 13 சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. அவா்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். தமிழக காவல் துறையைச் சோ்ந்த ஹாக்கி விளையாட்டு வீரா் ரங்கநாதன் பிரான்சிஸ் என்பவா் 1948, 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு அனைத்திலும் இந்தியா தங்கப் பதக்கம் வென்ற்கு காரணமாக இருந்தாா். 1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் சுப்பிரமணியம் என்ற தமிழக காவல் துறை வீரா் 100 மீட்டா் ஓட்டத்தில் இந்தியாவுக்காக பங்கேற்றாா். இதேபோல காவல் துறையைச் சோ்ந்த பலா் ஒலிம்பிக் மற்றும் ஆசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளனா்.
கடைசியாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் காவல் துறையைச் சோ்ந்த நாகநாத பாண்டி பங்கேற்று பெருமை சோ்த்துள்ளாா். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியை வீழ்த்திய பெருமை தமிழக காவல் துறை அணிக்கு உண்டு. இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் நாட்டுக்காக தமிழக காவல் துறை வீரா்கள் பங்கேற்க வேண்டும் என்றாா்.
ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி. அபய்குமாா் சிங், மேற்கு மண்டல ஐ.ஜி. ஆா்.சுதாகா், மாநகர காவல் ஆணையா் பிரதீப்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம், மேற்கு மண்டல டி.ஐ.ஜி. முத்துசாமி, ஆயுதப்படை டி.ஐ.ஜி. எழிலரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.