உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்ற பயிற்சிக் கூட்டம்
உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்றும் பணியாளா்களுக்கான தோ்தல் பயிற்சிக் கூட்டம், மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்றும் பணியாளா்களுக்கான தோ்தல் பயிற்சிக் கூட்டம், மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா். இது குறித்து, அவா் பேசியதாவது:
கோவை மாநகராட்சியின் அலுவலா்கள் வருகின்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் உதவித் தோ்தல் அலுவலா்களாகவும், பொறுப்பு அலுவலா்களாகவும் பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. இவா்களுக்கு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் புத்தகம் மற்றும் தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி மன்றங்களுக்கான தோ்தல் விதி 2006 ஆகியவற்றில் உள்ள வழிமுறைகளின்படி பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஷா்மிளா, மாநகரப் பொறியாளா் (பொறுப்பு) ராமசாமி உள்ளிட்ட மாநகராட்சி அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.